தேர்தலின் பின் சுதந்திர முன்னணி ஆட்சி அமைக்கப்படுவதை எவராலும் தடுக்க முடியாது - விமல்

திர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் பின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைக்கப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

நாராஹென்பிட்டி அபயாராம விகாரையில் மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.  நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியை ஏற்படுத்த மக்கள் தயார் நிலையில் உள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார். 

பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்கள் கண்களில் மண் தூவி மக்களை ஏமாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் வந்துள்ளதாக விமல் கூறியுள்ளார். 

அதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிளவுபடச் செய்ய முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகள் செயற்படவில்லை என தெரிவித்துள்ளார். 

நாட்டை முன்னேற்ற மைத்திரி - ரணில் கூட்டணியால் முடியாது என்றும் மைத்திரி - மஹிந்த கூட்டணியால் மாத்திரமே முடியும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

மஹிந்த ராஜபக்ஷ திருடன் என்றால் அவருக்கு வேட்பு மனு கொடுப்பது எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறது. திருடன் என்றால் இலகுவாக தோற்கடிக்க முடியும்தானே என விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார். 

மஹிந்த வந்தால் தோல்வி நிச்சயம் என்ற தெரிந்தே இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வதாக அவர் கூறினார். 

எனவே பழைய கோபதாபங்கள், வாத விவாதங்களை மறந்து தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் 9ம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெறவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்குபற்ற வேண்டும் என்றும் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -