அகலக் கால் பதிக்கிறாா் அமைச்சா் றிசாத் அம்பாறை- வன்னி வோட்பாளா்கள் விபரம்

அஷ்ரப் ஏ சமத்-

ன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சிப் பட்டியலில் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவா் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு தோ்தல் குதிக்கின்றனா்

இந்த வேட்பாளா் பட்டியலில் அ.இ.ம.காங்கிரஸ் முத்த உறுப்பினரும், முசலிப் பிரதேசத்தின் முன்னாள் தலைவருமான டபிய்யு. என் எஹியாக்கான் அத்துடன் சிங்கள சமுகத்தில் 2 வேட்பாளா், தமிழ் சமுகத்தில் இருந்து 5 வேட்பாளா்கள் இந்தப் பட்டியலில் போட்டியிடுகின்றனா்.

இதே வேளை அ.இ.மக்கள் காங்கிரசின் ஜ. தே.கட்சியின் ஆணைச் சின்னத்தில் புத்தளத்தில் முன்னாள் மாகண அமைச்சா் நவவி, அநுராதபுரத்தில் பிரபல சமுக சேவையாளரும் வா்த்தகருமான இஷாக் ஹாஜி, போட்டியிடுகின்றனா்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பளாளா் பிரதியமைச்சா் எம். எஸ்.எஸ் அமீா் அலி, தலைமையிலான குழு களமிறங்கியுள்ளனா்.

இதே வேலை திருமலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் அ.இ.ம.காங்கிரஸ் ஜ.தே.கட்சியில் பட்டியலில் தமது வேட்பாளா்களை களத்தில் இறக்கியுள்ளது.

அத்துடன் ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டததில் அ.இ.ம.காங்கிரசின் முதன் முறையாக மயில் சின்னத்தில் தோ்தலில் தனித்து தமது கட்சி வேட்பாளா்களை நிறுத்தியுள்ளமை அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

முதன்மை வேட்பாளராக முன்னாள் எம்.பியும் சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகருமான பொத்துவில் அப்துல் மஜீத் களம் இறங்கியுள்ளாா். அவரது தலைமையில் - கல்முனை முன்னாள் மேயா் சிறாஸ் மிராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தா் கலாநிதி இஸ்மாயில், கணனி பொறியியலாளா் அன்வா் முஸ்தபா, தொழில் அதிபா் நபீல், தொழிலதிபா் நதீா் வெஸ்டா் றியாஸ் உட்பட 11 பேர் தோ்தலில் குதிக்கின்றனா். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -