30 வருட குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்து வைத்தார் ஹக்கீம்!

க்கரைப்பற்று இலுக்குச்சேனை பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் நலன் கருதி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக அமைக்கப்பட்ட குடிநீர்க் குழாய்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று திங்கள்கிழமை (27) மாலை திறந்து வைத்து பாவணையாளர்களிடம் கையளித்தார்.

இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி 30 வருடங்களாக அவதிப்பட்டனர். இந்த விடயம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவர் அம்மக்களுக்கு குடிநீர் வசதியை வழங்கி அவர்களின் அவலநிலைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

சுத்தமான குடிநீர் இன்மையால் தாம் 30 வருடங்களாக பல நோய்களுக்கு உள்ளாகியதாகவும் தற்போது அதிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியதோடு அமைச்சருக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கட்சியில் செயலாளர் நாயகமும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸனலி, கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீத், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரவரும், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் செயலாற்றுப் பணிப்பாளருமான ஹனிபா மதனி, அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், அக்கரைப்பற்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் ஜெ.என்.கரீம், திட்டமுகாமையாளர் (ஜெய்க்கா)  பொறியியலாளர் எம்.எம். நசீர் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -