கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் 2015. 06. 13 தொடக்கம் 2015. 06. 16 வரை நடைபெற்ற இப்போட்டியில் நிந்தவூர் அல் - அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் இரண்டு தங்கப்பதக்கங்களையும் 5 வெள்ளிப்பதக்கங்களையும், 3 வெங்களப்பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.
- 21 வயதுப்பிரிவு ஏ . அஸ்மத் சஹி நீளம் பாய்தலில் தங்கப்பதககத்தையும்
- 19 வயதுப்பிரிவு எம். ஜ. எம். அசான் குண்டு போடுதலில் தங்கப்பதககத்தையும், தட்டெறிதலில் வெள்ளிப்பதக்கத்தினையும் நீளம் பாய்தலில் வெண்கலப்பதக்கத்தினையும்
- 15 வயதுப்பிரிவு 4ஒ100 ஆ அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர்
ஏ அய்யாஸ், எம். ஜ. ஏம் ஹமாஸ், எம் ஏ. எம். அம்றி, எம். என். அம்றி ஹஸ்னி.
எம். கே. ஏம். அசாயிம்
- 21 வயதுப்பிரிவு எம். எஸ். எம். பாகிர் உயரம் பாய்தலில் வெண்கலப்பதக்கத்தினையும்
- 17 வயதுப்பிரிவு ஏ. ஏ. ஆத்திப் அஹமட் முப்பாய்ச்சலில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்று அல் - அஷ்றக் தேசிய பாடசாலைக்கும் கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இதில் குறிப்பாக ஏ . அஸ்மத் சஹி 2015 ஆண்டின ;21 வயது ஆண்கள்;பிரிவு நீளம் பாய்தலில் 6.54 ஆ தூரம் பாய்ந்து சிறந்த மெய்வல்லுனர் வீரராகவும், 2015 ஆண்டின் கிழக்கு மாகாண சிறந்த மெய்வல்லுனர் வீரராகவும் தெரிவு செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கும் , கல்முனை வலயத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுக்களில் 15 வயது ஆண்கள் பிரிவு பூப்பந்தாட்ட அணி சம்மியனாகவும் 19 வயது ஆண்கள் பிரிவு பூப்பந்தாட்ட அணி இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

