கிழக்கில் றிஷாத்துக்கு ஆதரவு கூடுகிறது : அவரை தோற்கடிக்கவே முடியாது -பஷீர் ஷேகுதாவூத்

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் ஷேகுதாவூத் நீண்டதொரு உரையை நிகழ்த்தினார் இருப்பினும் அவரது உரையை இரவு 7.20 மணியையும் கடந்த நிலையில் தொடர்ந்ததால் அங்கு வந்தவர்களுக்கு சற்று அலுப்பை ஏற்படுத்தியது.

அவரது உரை ஆக்கபூர்வமானதாக இருந்தாலும் காலம், நேரம் என்ற பிரச்சினை காணரமாக விரைவாக முடியாதா என்ற ஏக்கப் பெருமூச்சு மண்டபத்தில் நிறைந்து காணப்பட்டது. சபை மரபு, பஷீர் ஷேகுதாவூதுக்கு மரியாதை என்ற இரு காரணங்களால் எவரும் மண்டபத்தை விட்டு வெளியேறவில்லை.

திடீரென பஷீர் ஷேகுதாவூத் ஒரு விடயத்தைக் அங்கு தெரிவித்தவுடன் மண்டபத்தில் நிறைந்திருந்தவர்கள் உஷாரடைந்ததுடன் மட்டுமின்றி, தங்களது கருத்துகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டதனைக் காணவும் கேட்கவும் கூடியதாக இருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரான பஷீர் ஷேகு தாவூத் அப்படி என்ன கூறினார் என்றுதானே கேட்கிறீர்கள்.

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனை வன்னியில் தோற்கடிக்க முடியாது. கிழக்கிலும் அவருக்கான ஆதரவு கூடுகிறது“ என்றாரே பார்க்கலாம்.

இதேவேளை, காலையில் இடம்பெற்ற வில்பத்து தொடர்பான கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜெமீல் கலந்து கொண்டார்.

அவரும் சில விடயங்களை அங்கு கூறினார். வில்பத்து தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் ஒரு பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாகவும் கூறினார். இவ்வாறான கூட்டங்களில் தான், கட்சி, அரசியல் பார்த்து கலந்து கொள்வதில்லை என்று கூறினார்.

கூட்டம் முடிந்தவுடன் ஜெமீலுக்கு பலரும் பராட்டு தெரிவித்தனர். நானும் கைலாகு கொடுத்து வாழ்த்து கூறினேன்.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
(சிரேஷ்ட ஊடகவியலாளர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -