வாடகைக்குப் பெற்ற வாகனங்களை விற்பனை செய்த பெண் கைது!

வாடகைக்குப் பெற்ற மோட்டார் வாகனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் ஹொரண பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் வாகனத்தை கொள்வனவு செய்ய முற்பணம் வழங்கிய ஒருவர் முன்வைத்த முறைப்பாட்டினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைதாகியுள்ளார். 

இரண்டு நிறுவனங்களிடம் இருந்து வாடகைக்குப் பெற்றுக் கொண்ட மோட்டார் வாகனங்களை இவர் இவ்வாறு விற்பனை செய்துள்ளதாக, குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

மேலும் வாகனங்களை விற்பனை செய்வதற்கான முற்பணமாக மாத்திரம் சந்தேகநபரால் பல்வேறு கொள்வனவாளர்களிடம் இருந்து ஒன்பது இலட்சத்து 29,000 ரூபா பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது,. 

அத்துடன் 29 வயதான குறித்த பெண் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -