சேலம்,சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜவுளிக்கடையில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் நான்காவது மாடியில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ஜன்னல் வழியாக தீ கொளுந்து விட்டு எரிந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.
ஜவுளிக்கடை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அறையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீவிபத்தில் அறையில் இருந்த ஏசி, கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.
t.o.c
