எஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு - ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி நல்லதம்பியார் வீதியில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று ஏறாவூர்ப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.
அங்கிருந்த 360 லீட்டர் கள்ளு கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வி.ஆர் தீப்தி விஜயவிக்ரம தெரிவித்தார்.
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஈஸ்ட் உள்ளிட்ட இரசாயன பதார்த்தங்கள் கலக்கப்பட்டு கள்ளு உற்பத்தி நடைபெற்று வந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.(ந)
