எஸ்.எம்.அஜூஹான்-
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 14 பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றிரவு (17) பாலமுனையில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரீப் சம்சுதீன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பள்ளிவாசல் தலைவர்களிடம் காசோலையை வழங்கி வைத்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை அமைப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலின் நெறிப்படுத்தலில் மத்திய குழு கடந்த நான்கு வருடங்களாக பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



