அபூ-இன்ஷாப்-
முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகளைக் கண்டித்தும் வடபுல முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்தில் காணப்பட்டுவரும் பாராபட்சங்ககை கண்டித்தும் வில்பத்து பிரதேசத்திலுள்ள முஸ்லீம்களின் காணிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்படும் சதி முயற்சிகளைக் கண்டித்தும் சம்மாந்துறையில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் இன்று (29) ஜூம்மாத் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.
சம்மாந்துறையிலுள்ள ஒசேட் சமூக சேவை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் பல நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இவ்வமைப்பினால் சம்மாந்துறைப் பிரதேச செயலாளருக்க எழுதப்பட்ட மகஜர் கடிதமொன்று சம்மாந்துறை ஹிஜ்றா சந்தி மணிக்கூட்டுக் கோபூரத்தக்கு அருகில் வைத்து அமைப்பின் தலைவர் ஏ.சீ.சஹீல் மற்றும் அமைப்பின் ஆலோசகர் என்.எம்.சமீர் ஆகியோரால் சம்மாந்துறைப் பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப் அவர்களிடம்; வழங்கி வைக்கப்பட்டன.ச




