மே தினமான நேற்று விகாரைக்கு வழிபாட்டிற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழமையாக அணியும் சிவப்பு நிற துண்டை அணியாமல் வெறும் கழுத்துடன் வெள்ளை ஆடை அணிந்து சென்றுள்ளார்.
மே தினம் அரசியல்வாதிகளின் தினமாக மாற்றமடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கவலையுடன் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மே தினக் கூட்டங்களை நடத்துவதாகவும், தொழிலாளர்கள் தனித் தனியாக மே தினங்களை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் அவ்வாறு பாதுகாக்க தவறினால் அரசாங்கத்திற்கு எதிர்காலமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.(ந)



