மகனை நாய் போல் கழுத்தில் கயிறு கட்டி படமெடுத்து பேஸ்புக்கில் போட்ட தாய்!

ரு தாய் தனது மகனை நாய் போல கழுத்தில் கயிறு கட்டி நடத்தியதை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரனி என்ற பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் தனது ஒன்றரை வயதான மகனை நாயின் கழுத்தில் கயிறு கட்டி வைப்பது போல பாவித்தும், நாய்க்கு உணவு வழங்கப்படுவது போல, அவனுக்கு ஒரு கிண்ணத்தில் உணவு அளிப்பது போலவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தினை பகிர்ந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சமூக நல செயலாளர் கூறுகையில், “அது வேடிக்கைக்காக செய்யப்பட்டது என்றாலும் கூட, அது மோசமான செயலாகும். ஏனென்றால் இது வேடிக்காகத்தான் செய்யப்பட்டது என்று அந்த குழந்தைக்கு தெரியாது. பொம்மையை போல குழந்தைகளை நடத்த யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி யாரேனும் செய்தால் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் அந்நாட்டின் குழந்தைகள் நல அமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள், அந்த குழந்தைய தங்களின் கண்காணிப்பில் எடுத்துக் கொண்டுள்ளனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -