உழவு இயந்திரத்தின் இழுவை பெட்டி முறிந்து விழுந்ததனால் இளைஞர் மரணம்!

ஏஎம் றிகாஸ்-
ட்டக்களப்பு – ஏறாவூர் வந்தாறுமூலை பிரதேசத்தில் உழவு இயந்திரமொன்றின் இழுவை பெட்டி முறிந்து விழுந்ததனால் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.

வந்தாறுமூலை உப்போடை வீதியில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் 24 வயதுடைய இளையதம்பி திலகராஜ் என்பவரே பலியானவரென ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இழுவைப் பெட்டியிலிருந்த மணலைக் கொட்டுவதற்காக உயர்த்தப்பட்ட இழுவைப் பெட்டியை மீண்டும் சீர் செய்வதற்காக அந்த உழவு இயந்திரத்தின் உதவியாளர் கீழே சென்ற போது பெட்டியின் பம்பி முறிந்து விழுந்த வேலையே உதவியாளர் சிக்கியுள்ளாரென ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -