மட்டில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர் கைது!

காத்தான்குடி - ஒல்லிக்குளம் பிரதேசத்தில் பத்து வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் 55 வயதுடைய சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று திங்கட்கிழமை (25) மாலை ஒல்லிக்குளம் பிரதேசத்தில் குறித்த சந்தேக நபரின் வீட்டிற்கு முன்னாள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டுக்குள் அழைத்துள்ளார். 

பின் வீட்டின் கதவுகளை மூடி விட்டு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார். 

சிறுமி கூக்குரலிட்டு அழுது கதவை திறந்து கொண்டு ஓடிச் சென்று தாயிடத்தில் விடயத்தை கூறியதையடுத்து, அயலவர்கள் காத்தான்குடி பொலிசுக்கு அறிவித்துள்ளனர். 

பொலிசார் ஸ்தளத்திற்கு விரைந்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர். 

குறித்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர். 

குறித்த சந்தேகநபர் காத்தான்குடியில் வசிப்பவர் எனவும் இவருக்கு ஒல்லிக்குளத்திலும் வீடொன்று இருப்பதாகவும் தெரியவருகின்றது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -