மே மாதம் முதலாம் திகதி முதல் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படுவதாக தொழிலாளர் அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளம் 10,000 ரூபாவாகவும் ஒரு நாளுக்கான ஆகக்குறைந்த ஊதியம் 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு மே முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தொழிலாளர் அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் துறை ஊழியர்களின் தற்போதைய சம்பளம் 1500 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.ச