NFGGயின் மேதின நிகழ்வுகளும், தொழிலாளர் கௌரவிப்பும்!

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்வும் தொழிலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (01.05.2015) அதன் மக்கள் அரங்கில் இடம்பெற்றது.

NFGGயின் காத்தான்குடி பிரதேச செயற்குழு செயலாளர் SMM.பசீர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MHAM.மிஹ்ழார், NFGGயின் பிராந்திய செயற்குழு அமீர் MMM.ஜனூப், முன்னாள் நகரசபை உறுப்பினர் AGM.ஹாறூன் மற்றும் ஐ.தே.க. காத்தான்குடி அமைப்பாளர் HMM.முஸ்தபா, ALA.கையூம் ஆசிரியர், சமுர்த்தி வீடமைப்புப் பிரதியமைச்சரின் காத்தான்குடி இணைப்புச் செயலாளர் அல்ஹாஜ் AJM.மாஹிர் உட்பட உலமாக்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அரச மற்றும் தனியார் துறை தொழிலாளர்களைக் கௌரவிக்கும் வகையில் உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.










ஐ.தே.க காத்தான்குடி கிளை ஏற்பாடு செய்த மே தின நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்
ஐ.தே.க காத்தான்குடி கிளை ஏற்பாடு செய்த மே தின நிகழ்வு நேற்று (01.05.2015) ரிஸ்வி நகர் சனசமூக நிலையக் கட்டடத்தில் இடம்பெற்றது.
ஐ.தே.க.யின் காத்தான்குடி அமைப்பாளர் HMM.முஸ்தபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஐ.தே.க.யின் காத்தான்குடி செயற்குழு உறுப்பினர்களான ALA.கையூம் ஆசிரியர், KM.அலியார், NFGG பிராந்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.



 காத்தான்குடி ஆட்டோ சங்க மேதின நிகழ்வில் NFGGயின் தவிசாளர்  விஷேட அதிதியாகக் கலந்துகொண்டார்
காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கம் நடத்திய மே தின ஊவலம் மற்றும் கூட்டம் என்பன நேற்று (1.05.2015) இடம்பெற்றது.
காத்தான்குடி போலிஸ் நிலைய முன்றலில் இருந்து ஆரம்பமான மே தின ஊர்வலம் கடற்கரை வீதியில் அமைந்திருக்கும் ஆட்டோ சாரதிகள் சங்க காரியாலயத்தின் முன்னால் நிறைவுற்று காரியாலயத்தில் மே தின கூட்டம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் அவர்கள் விஷேட அதிதியாகக் கலந்துகொண்டதுடன் NFGGயின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MHAM.மிஹ்ழார், ஐ.தே.க.யின் காத்தான்குடி அமைப்பாளர் HMM.முஸ்தபா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் MIM.இர்பான் உள்ளிட்ட ஆட்டோ சாரதிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர் MIM.இர்பான் அவர்களால் ஒலிபெருக்கி சாதனங்களும் ஆட்டோ சாரதிகள் சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதுடன் விபத்து ஒன்றில் தனது ஒரு கையினை இழந்த ஆட்டோ சாரதி ஒருவருக்கும் நிதியுதவி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை ஆட்டோ சாரதிகள் சங்கம் நடாத்திவருகின்ற சிக்கனக் கடன் உதவி வேலைத்திட்டத்திற்கு NFGG நிதியுதவி வழங்கவுள்ளதாகவும் அதன் தவிசாளர் MM.அப்துர் ரஹ்மான் இங்கு உரையாற்றும்போது உறுதியளித்தார்.ச





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -