ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் துப்பாக்கியுடன் வந்தவர் கைது!

டந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி அகுனகொலபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்த கூட்டம் ஒன்றில், துப்பாக்கியுடன் வருகைத் தந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் காவற்துறை மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில், குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள சிப்பாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் கடமையான்றிய ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -