வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இளைஞர் விளையாட்டு புத்துணர்வு நிகழ்வு!

நா.நவோஜ்-

வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இளைஞர் விளையாட்டு புத்துணர்வு நிகழ்வு சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினால்; ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விளையாட்டில் ஆற்றல் உடைய இளைஞர் சேவைகள் மன்றம் சகல இளைஞர் கழகங்களையும் உள்ளடக்கும் விதத்தில் கிராமத்திற்கு விளையாட்டுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கும் நாடு ரான வேலைத் திட்டத்தில் வாழைச்சேனையிலும் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் சமூர்;த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம், மட்டக்களப்பு இளைஞர் சேவைகள் மன்ற உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது கழகங்களுக்கிடையே மென் பந்து போட்டி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாகரை, ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி மத்தி, ஓட்டமாவடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சகல இளைஞர் கழகங்களுக்கும் விளையாட்டுப் பொருட்கள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் வழங்கி வைக்கப்பட்டது.ச








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -