'நீதியின் நிரல்' – நூல் வெளியீட்டு விழா!

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்- 
ட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம், அதன் அங்கத்தவர்களான சமாதான நீதிவான்களின் விபரங்களடங்கிய தொகுப்பு நூல் ஒன்றினை 'நீதியின் நிரல்' எனும் தலைப்பில் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி மண்டபத்தில் அண்மையில் வெளியிட்டு வைத்தது.

இம்மையத்தின் பொருளாளரும், ஸ்தாபகத் தலைவருமான ஜனாப் எம்.எம். அகமது லெப்பை (பாவலர் சாந்தி முகைதீன்) தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் சுவாமி சதுர்புஜானந்தா, மட்டு. மறை மாவட்ட ஆயர் பேரருட் தந்தை ஜோஸப் பொன்னையா, மௌலவி எம்.பி.எம். பாஹிம் (பலாஹி) ஆகிய மும்மதங்களின் குருமார்களுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எம்.ஸ். சார்ள்ஸ் மற்றும் மைய அங்கத்தவர்களான சமாதான நீதவான்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 190 சமாதான நீதிவான்களின் விபரங்களடங்கிய இந்நூல் இந்நிகழ்வின்போது மையத்தின் அங்கத்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -