காமுகர்களின் பசிக்கு 7 வயது சிறுமி தீனி: புங்குடுதீவானது கிளிநொச்சி!

கிளிநொச்சி - சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்தவென அவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 

கிளிநொச்சி - பரந்தன் - சிவபுரம் பகுதியில் 25ஆம் திகதி 7 வயது பாடசாலை மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்துடன் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி அதன்சூடு இன்னும் தனியாத நிலையில் கிளிநொச்சியில் சிறுமி ஒருவருக்கு இவ்வாறு நேர்ந்துள்ளதாக வௌியாகியுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -