தம்புத்தேகம - கோன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
வாரியப்பொல பகுதியில் இருந்து அனுராதபுரம் பிரதேசத்திற்கு சென்ற சிறிய ட்ரக் வண்டி ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியைவிட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சம்பவத்தில் எட்டு வயது சிறுமி ஒருவரே பலியாகியுள்ளார்.
விபத்தில் காயமடைந்த 13 பேரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அவற்றில் இரு பெண்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.(ந)
