முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள், ஆலோசனை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக சந்திரிக்கா தெரிவித்து வந்தாலும், பதவியை கொடுத்தால் ஏற்கத் தயார் என்ற நிலையிலும் உள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும், பொது வேட்பாளரை தெரிவுசெய்வதில் சிக்கல் நிலை காணப்பட்டபோது அவ்வப்போது சந்திரிக்காவின் பெயரும் அடிபட்டது. அப்போது, மக்கள் விரும்பினால் தான் பொதுவேட்பாளராக போட்டியிட தயாரென்ற கருத்தையும் சந்திரிக்கா வெளியிட்டிருந்தார்.
மறுபக்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் முயற்சிகளும், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.-