காரைதீவு பிறீமியர் லீக் போட்டிகளுக்கு வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு!

காரைதீவு பிறீமியர் லீக்-2015 இற்கான ஒவ்வொரு அணிகளுக்குமான வீரர்களை அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் திரு. M. சுந்தரராஜன் (அதிபர்/Senior Executive Coordinator-KPL) அவர்களின் நெறிப்படுத்தலின் திரு. C. நந்தகுமார் (திட்ட இணைப்பாளர், Consultant-KPL) , Dr.M.A. பிரசாத் (Chairman-KPL ) Eng.K.சசிகுமார் மற்றும் நிபுணத்துவ ஆலோசகர்கள், அணிகளின் பிரதிநிதிகள் அடங்கலான குழுவினரின் முன்னிலையில் இவ்வேல நிகழ்வு மிகவும் சுவாரசியமாகவும், நட்புறவுடனும் நடைபெற்ற இவ் ஏல நிகழ்வில் வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

கிழக்கிலங்கையின் காரைதீவின் இணைய நுழைவாயிலான www.karaitivu.org ஆனது இணையதளமானது காரைதீவின் விளையாட்டு துறையினை ஊக்குவிக்குமுகமாகவும், காரைதீவு விளையாட்டு துறையின் மற்றுமொரு அத்தியாயமாகவும், எமது கிராம வீரர்களை உள்ளடக்கியதாக காரைதீவு பிறிமியர் லீக் (Karaitivu Premier League) எனும் மென்பந்து கிரிகட் சுற்றுப்போட்டியினை முதன் முதலாக 2014 ல் அறிமுகம் செய்து வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காரைதீவு பிரீமியர் லீக் ஆனது காரைதீவில் எல்லோராலும் விரும்பி பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் சுற்றுப்போட்டாயாம். இப் போட்டியனது புகழ்பெற்ற காரைதீவின் கிரிக்கெட் வீரர்கள், ஒரு மேடையில் ஓற்றுமையாக விளையாடுவதற்று வழிவகை செய்வதற்காக காரைதீவு.ஓர் ஆல் வடிவமைக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -