பஷில் ராஜபக்ஷ வருகையால் விமான நிலைய பயணிகள் வருகைப்பகுதி மூடப்பட்டுள்ளது- படங்கள்

விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பகுதிக்கு வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் வருகை காரணமாக இவ்வாறு விமான நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலானவர்கள் விமான நிலையத்திற்கு வெளியே குழுமியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பசிலை வரவேற்க வந்த கூட்டம்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பாரிய கூட்டம் ஒன்று கூடியுள்ளது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திகாந்தன், வட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமார, மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்சா உட்பட அரசியல்வாதிகள் பலர் வருகை தந்துள்ளனர்.(த.வி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -