27ம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பும் பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டமும்-படங்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்று வட்ட பாதையில் தற்பொழுது ஆயிரகணக்கான பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதினால் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பாராளுமன்றத்தினுள் 100ற்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றனர்.


சபாநாயகர் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த கூட்டத்தினையும் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாடாளுமன்ற அமர்வுகள் 15 நிமிடத்திற்கு ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற அமர்வுகள் 15 நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளத
கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடத்தும் வகையில் இவ்வாறு நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் நாடாளுமன்றில் பதற்ற நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் 27ம் திகதி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நிலவிய பதற்ற நிலை காரணமாக எதிர்வரும் 27ம் திகதி வரை அவை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(த.வி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -