கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவைகள் அமைச்சின் நிதி ஒதுகீட்டில் நிர்மாணிக்கப்பட்ட விசேட தேவைகள் உடைய சிறுவர்களுக்கான ஹியுமன் லின்க் நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவுப் ஹக்கீம் சனிக்கிழமை (25) மருதமுனையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதில் கௌரவ அதிதிகளாக சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன் அலி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், கிழக்கு மாகண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர்,ஏ.எல்.தவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(ந)
(ந)