பிரித்தானியா பாராளுமன்ற தேர்தலில் இலங்கை பெண் போட்டி!

பிரித்தானியாவில் முன்னணி அரசியல்வாதியான இலங்கைப் பெண் ஒருவர் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். 1979ம் ஆண்டு பிறந்த 36 வயதான சமலி பெர்னாண்டோ, என்பவரே இந்த இலங்கைப் பெண் ஆவார் அவரது தாய் வனிதா பெர்னாண்டோ(தாதி), தந்தை சுமல் பெர்னாண்டோ(சட்டத்தரணி)

தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் சமலி பெர்னாண்டோ, இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில், கேம்பிரிட்ஜ் நகரில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

பிரித்தானியாவின் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது.

சட்டத்தரணியான சமலி பெர்னாண்டோ பிரித்தானியாவின் பாரிஸ்டர் பட்டதாரியும் ஆவர். சட்டத்தரணி தொழிலுக்கு மேலதிகமாக மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தும் அவர், மனநோயாளர்களுக்கு கையுறை ஒன்றையும் அணிவிக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

சமூகத்தில் மன நோயாளர்களுக்கு தேவையான உபசரிப்புக்கள் கிடைக்கப்பெறவேண்டும் என்ற ஒரு காரணத்தினாலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

அதேவேளை அவர் தற்பொழுது பிரித்தானியா அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு பெண்ணாகவும் காணப்படுகிறார் .

தனது உயர்கல்விக்காக அரசியலை தெரிவு செய்த காலம் தொட்டு, அரசியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாக சமலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -