பி. முஹாஜிரீன்-
எதிர்காலத்தில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டமானது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் என அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேச கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் அங்குரார்ப்ண நிகழ்வு (22) புதன்கிழமை நடைபெற்றது.
சின்னப்பாலமுனை சுகாதார நிலையத்தில் சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.எம். ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எல். அலாவுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில்;
ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குவதன் மூலம் நாட்டில் ஆரோக்கியமான சமூகம் உருவாகும். இங்கு வழங்கப்பட்டுள்ள போசாக்கு உணவுகளை வீண்விரயம் செய்யாமல் உபயோகப்படுத்தப்படல் வேண்டும். இதன் மூலம் அரசின் இலக்கை அடைவதற்கும் நாட்டில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாலமுனை பிரதேசத்தை சேர்ந்த 181 கர்ப்பிணி பாலுட்டும் தாய்மார்களுக்கு ரூபா 2000 பெருமதியான போசாக்கு உணவுப் பொதிகள் முதற் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முட்டை, நெத்தலி கருவாடு, அரிசி, பயறு, சோயா, கடலை, கச்சான் போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
.jpg)
.jpg)
.jpg)