நௌபலின் 'பொது நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான ஒர் அறிமுகம்' ஆங்கில நூல் வெளியீடு!

பி.எம்.எம்.காதர்-

ருதமுனையைச் சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரி எம்.எம்.நௌபல் எழுதிய 'பொது நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான ஒர் அறிமுகம்' என்ற ஆங்கில நூல் வெளியீடும் மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.அஸீஸ் ஞாபகார்த்த உரையும் அண்மையில் (28-02-2015); மருதமுனை'ஏ.ஆர்.ஏ.அஸீஸ் ஞாபகார்த்த அரங்கில்' நடைபெற்றது.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கவிஞர் எம்.எம்.விஜிலி ஆசிரியரின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது அதன் பின் இந்த நூல் பற்றி தென்கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில மொழிப்பிரிவின் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் நூலின் உள்ளடக்கம் பற்றி உரையாற்றினார்.

எழுத்தாளர் சத்தார் எம்.பிர்தௌஸ்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் ஆகியோர் இந்த நூல் பற்றிய அறிமுக மற்றும் ஆய்வுரை என்பவற்றை நிகழ்த்தினார்கள்.ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.ஏ.சமட் மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.அஸிஸ் பற்றிய ஞாபகார்த்த உரையை நிகழ்த்தினார்.நூலாசிரியர் எம்.எம்.நௌபல் ஏற்புரை நிகழ்தினார்.

நூலின் முதல் மூன்று பிரதிகளையும் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாயுதீன்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகரரப், ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சி; திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார்,கலாநிதி ஏ.ஏ.நுபைல் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். அறிவிப்பாளர் எம்.ஏ.நஸ்றுத்தீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -