நான் அதிகமாக பேசினால் அது தவறாகிவிடும்-மஹிந்த

நான் அதிகமாக பேசினால் அது தவறாகிவிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹொரன மாதுராவ பிரதேசத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் இன்று கண்டியில் இடம்பெறவுள்ள பேரணியில் கலந்து கொள்வீர்களா என்று கேள்வியெழுப்பிய போது, அதற்கு பதிலளித்த மஹிந்த, பேரணியில் கலந்துகொள்ளுமாறு தனக்கு அழைப்புவந்துள்ளது ஆனாலும் இன்று திருமண வீடொன்றில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கையை நான் பாதுகாக்கின்றேன். மேலும் நான் பேசியது போதுமா? நான் அதிகமாக பேசினால் தவறாகிவிடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -