முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள பல உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
இந்தநிலையில் மாதம் ஒன்றுக்கு 250 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்ளும் மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த விமான நிலையத்தை அமைப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பாரியளவு கடன் தொகையை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.