வீரமுனையில் இடம்பெற்ற திருவள்ளுவர் குருபூசை தினம்!

சுலக்சன்-
திருக்குறள் மூலம் வாழ்வின் இரகசியங்களை எமக்கு தந்த திருவள்ளுவரின் குரு பூசை தினம் இன்றாகும். இதனையொட்டி இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வீரமுனை குருசுவாமி ஐயர் அறநெறிப் பாடசாலையினால் நடாத்தப்பட்ட திருவள்ளுவர் குருபூசை தினம் ஞாயிற்றுக்கிழமை (08.03.2015) காலை 8.00 மணிக்கு வீரமுனை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றது.

சீர்பாத தேவி சிறுவர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் திரு.தா.விநாயக மூர்த்தி (பொறியிலாளர்) தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச இந்துக்கலாசார உத்தியோகத்தர் திருமதி.சிவலோஜினி, திரு.S.சிவசுந்தரமூர்த்தி (அற நெறி பாடசாலை ஆலோசகர்-ISA), அறநெறி அதிபர் ஆசிரிய மாணவர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலைய மாணவர்கள், நிருவாகசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து அறநெறி மாணவிகளினால் இறை வணக்கமும் அற நெறி கீதமும் இடம்பெற்றதுடன் சிறுவர் அபிவிருத்தி நிலைய மாணவர்களினால் பஜனை மற்றும் திருவள்ளுவர் திருவடி பூசை இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் திரு.தா.விநாயக மூர்த்தி அவர்களின் தலைமையுரையும், அறநெறி மாணவ மாணவிகளின் பேச்சு, திருக்குறள் மனனம் இடம்பெற்றதுடன் அறநெறி பாடசாலை ஆலோசகர் S.சிவசுந்தரமூர்த்தி அவர்களின் சிறப்புரை, குருசுவாமி ஐயர் அறநெறிப் பாடசாலை அதிபர் திருமதி. க.கஜேந்தினி அவர்களின் நன்றியுரை இடம்பெற்றதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -