ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில் கெடுபிடிகளின் அட்டகாசம் இல்லை -ஹஸன் அலி MP







பி.எம்.எம்.எ.காதர்-

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில்; எந்தக் கெடுபிடிகளும் இல்லாமல் எல்லா அமைச்சுக்களும்,அமைச்சர்களும் சுதந்திரமா இயங்குகின்ற நிலை உருவாகியிருக்கின்றது என சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
மருதமுனை பிரதேச வைத்திய சாலைக்கு நேற்று (23-02-2015)வருகை தந்த hரஜாங்க அமைச்சர் வைத்தியசாலையின் அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் மற்றம் வைத்தியசாலை டாக்டர்கள்,உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி போல் வீரசிங்க,கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம்,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் வைத்தியசாலையின் அபிவிருத்திசபை உறுப்பினரகளும் கலந்து கொண்டனர். 

இங்கு சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:- புதிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒரு முறைதான் ஜனாதிபதியாக இருப்பார் இரண்டாவது முறை அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார்.

அதனால் அவரிடம் அவருக்கான எதிர்கால அஜந்தா எதுவும் இலை அதனால் மக்களுக்கான நல்லாட்சியைக் கொண்டு வருகின்ற பணியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். நூறு நாள் வேலைத்திட்டத்திலே தேசிய மட்டத்தில் சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான அஜந்தா ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

அதன் மூலம் யாப்பு மாற்றம்,சுயாதீன ஆணைக்குழுவை இன்னும் பலமான அதிகாரத்துடன் நியமித்தல்,பழைய தேர்தல் தொகுதித்திட்டம் கொண்டுவரப்பட இருக்கின்றது இதில் 70 விகிதம் நேரடியாக தொகுதிகளில் இருந்தும்; 30விகிதம் விகிதாசார தேர்தல் முறையையும் உட்புகுத்தி ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்ய இருக்கின்றார்கள்.

மேலும் அரசியல் வாதிகள் கட்சி மாறுகின்ற போது அவர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்கும் வகையிலான சட்டமும் கொண்டுவரப்பட இருக்கின்றது. அப்படியான சூழலில் நானும் இன்னும் இரண்டு மாதத்திற்குத்தான் அமைச்ராக இருக்கலாம்.

முதல்வன் திரைப்படத்தில் ஒருநாள் முதலமைச்சர் வருவதைப் போல் நாங்கள் நூறு நாள் அமைச்சர்கள்தான் இதற்குள் நாங்கள் எங்களால் முடிந்தவற்றைச் செய்வோம் என ராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி மேலும் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார்,வைத்திய சாலையின் அபிவிருத்தி சபையின் செயலாளர் ஏ.ஆர்.ஏ.சத்தார்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ஆகியோர் வைத்தியசாலையின் தேவைகளைப் பற்றி எடுத்துக் கூறினார்கள். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -