கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று புதன் கிழமை 18.02.2015 விடுமுறை வழங்கி எதிர் வரும் சனிக்கழமை 21.02.2015 பதில் பாடசாலை நடாத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண கல்விபணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீh அஹமடின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் கிழக்கு முதல்வரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே அவராள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற மகா சிவராத்திரி முன்னிட்டு இரவு நேரங்களில் இந்து மக்கள் விழித்திருந்து தமது மதக் கடமைகளை அனுஷ்டிப்பதனாலும் இந்து மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஏற்படும் கஷ்டங்களை கருத்தில் கொண்டே முதல்வர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் இந்த நடவடிக்கை குறித்து பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை வடக்கு, மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து தழிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.