நிந்தவூரில் வாகன விபத்து-ஒருவரின் நிலை கவலைக்கிடம்!

சுலைமான் றாபி-
நிந்தவூர் பிரதான வீதியில் (மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசலுக்கு முன்பாக) இன்று (15) சற்று முன்னர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று நேரே மோதுண்டதால் மோட்டார் சைக்கிளில் பயணித்த அனைவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் விபத்து சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டதோடு மற்றுமொருவர் மயக்கமுற்ற நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்திக்கொள்ள முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நடந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும் விபத்து இடம்பெற்ற இடத்தில் பொலிசாரின் ஜீப் வண்டி தரித்திரிந்தமையினால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொலிசார் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர். 

இதேவேளை இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.  



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -