தலைவர் பிழை செய்­கிறார் என்று கண்டால் முஸ்லிம் தலைமைகள் அப்­போதே வில­கி­யி­ருக்க வேண்டும்- பௌஸி

னா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தலைமையின் கீழ் இருந்த முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் கடைசி நேரத்தில் நம்­பிக்கை துரோகம் செய்து விட்­டார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு உறு­தி­யான கொள்கை இருக்க வேண்டும். கடைசி நேரத்தில் கைவி­டு­வது சரி­யில்லை. தலைவர் பிழை செய்­கிறார் என்று கண்டால் அப்­போதே வில­கி­யி­ருக்க வேண்டும் என்று சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரி­வித்தார்.

முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி பொது எதி­ர­ணியின் பக்கம் இணைந்­தமை தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ஜனா­தி­பதி மூவின மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லவே திட­சங்­கற்பம் பூண்­டுள்ளார். இந் நிலையில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இன­வாதம் பேசி பிரிந்து சென்­றுள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இது சமூ­கத்தைக் காட்டிக் கொடுக்கும் செய­லாகும்.

ஜனா­தி­ப­தியின் மீது நம்­பிக்கை இல்லா விட்டால் அவர்கள் இறுதி நேரம் வரை காத்­தி­ருக்கத் தேவை­யில்லை. அர­சாங்­கத்தில் இருந்து கொண்டு சகல வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் பெற்று அனு­ப­வித்து விட்டு தமது சுய நலன் கருதி சமூ­கத்தின் நலனை மதி­யாது ஜனா­தி­பதி சரி­யில்லை என்று கூறு­வது நகைப்­புக்­கு­ரி­ய­தாகும்.

அர­சி­லி­ருந்து பிரிந்து செல்­வ­தற்கு ஜனா­தி­பதி தேர்தல் திகதி அறி­விக்­கப்­படும் வரை இருந்­தி­ருக்கத் தேவை­யில்லை. தேர்தல் திகதி அறி­விக்­கப்­பட்டு மூன்று கிழ­மை­களின் பின்பே ரிஷாத் விலகிச் சென்றார். ரவூப் ஹக்கீம் ஒரு மாதத்தின் பின்பு விலகிச் சென்றார். பைசர் முஸ்­தபா இரண்டு தினங்­க­ளுக்கு முன்பு பிரிந்து சென்றார். இவர்­களின் வெளி­யேற்றம் சமூக நலன் சார்ந்­த­தாக இல்லை. சுய­நலன் கொண்­ட­தா­கவே உள்­ளது.

பிர­தி­ய­மைச்சர் கண்­டி­யி­லி­ருந்து அம்­மக்­ களை ஏமாற்றி விட்டு கொழும்­புக்கு வந்தார். கொழும்பு மத்தி அமைப்­பா ளர் பத­வி­யையும் பெற்றார். தற்­போது கொழும்பு மக்­க­ளையும் ஏமாற்றி எதி­ர­ணி யில் இணைந்­துள்ளார். முஸ்­லிம்­க­ளிடம் உறு­தி­யான கொள்கை இருக்க வேண்டும். தலை­மைத்­து­வத்­துக்கு கட்­டுப்­படும் பண்பு இருக்க வேண்டும்.

முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் சுய நல அர­சி­யலை மக்கள் நன்­க­றிந்­தி­ருக்­கி­ றார்கள். அவர்கள் மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஆத­ரிக்க ஏற்­க­னவே தீர்­மா­னித்து விட்டார்கள். அவர்கள் பொது எதி­ர­ணியில் இணைந்­தி­ருக்கும் முஸ்லிம் தலைவர்­களின் பசப்பு வார்த்­தை­க­ளுக்கும் உறுதி மொழிகளுக்கும் மயங்கி விடாது ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -