ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான முதலமைச்சர் தெரிவுக்கு பச்சைகொடி காட்டியுள்ள நிலையில், கிழக்கு முதலமைச்சரை நியமிக்கும் அதிகாரம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்த ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய பச்சைக்கொடி குறித்து குறிப்பிட்டுள்ளதுடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒற்றுமைபட்டு, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒரு முதலமைச்சரை தெரிவு செய்யும்படி வேண்டியுள்ளார்.
எனினும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தாம், ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளாது, அந்த தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை மீண்டும் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து மிகவிரைவில் கிழக்கு மாகாண முதலமைச்சராக, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரின் பெயரை ரவூப் ஹக்கீம் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. ஜமு
