பாராளுமன்றில் அமைதியின்மை -மீண்டும் ஒத்திவைப்பு!

ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் தவறு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசர் பதவியில் அமர்த்தியமை மற்றும் மொஹான் பீரிஸ் விடயத்தை அரசாங்கம் கையாண்ட விதம் ஆகியவை குறித்து, கட்சித் தலைவர்கள் சந்திப்பில் விளக்கமளிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் நேற்று கோரிக்கை விடுத்தனர். 

இதற்கு பதிலளிக்க தான் எதிர்பார்த்துள்ளதாக இதன்போது குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது குறித்து இன்று பாராளுமன்றத்தில் விஷேட உரையாற்றினார். 

மெஹான் பீரிஸ் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தினத்தன்று அரலி மாளிகையில் இருந்ததாகவும், பிரதம நீதியரசர் போன்ற முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் அவ்வாறு செயற்படுவது அனுமதிக்க முடியாது எனவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். 

மேலும் பிரதம நீதியரசர் சுயமாக செயற்படவில்லை எனவும், அரசாங்கத்திற்கு தேவையான விதத்தில் வழக்கு தீர்ப்புக்களை அளிக்க தான் தயாராக இருப்பதாக கூறியதாகவும், பல்வேறு பதவிகளை அவர் எதிர்பார்த்ததாகவும் ரணில் குறிப்பிட்டார். 

இதற்கு பாராளுமன்ற அமர்வுக்கு வந்திருந்த விமல் வீரவங்க உள்ளிட்ட உறுப்பினர்கள் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். 

இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபையை 20 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்தார். 

அத்துடன் 20 நிமிடங்களின் பின்னர் கட்சித் தலைவர்களின் சந்திப்பு இடம்பெறும் என எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -