செய்தி தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விளக்கம்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது என ஜனாதிபதி செயலகம் நேற்று வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பை ஆதாரம் காட்டி அரசாங்க ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும் இந்த தகவல் தொடர்பில் தற்போது சில வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பில் தற்போது சவுதி அரேபியாவில் தங்கியுள்ள கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனை சற்று நேரத்துக்கு முன்னர்
 (இரவு 9.27) தொடர்பு கொண்டு நான் கேட்ட போது இவ்வாறு பதிலளித்தார்.

” ஜனாதிபதியைச் சந்தித்த போது 20 விடயங்கள் கொண்ட மகஜர் ஒன்றினைக் கையளித்தோம். அவைகள் அனைத்தையும் அரசாங்கம் நிறைவேற்றித் தர வேண்டும். இது தொடர்பில் எமது கட்சியின் செயலாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின செயலாளரும் கூட்டாக ஒப்பமிட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாம் ஆதரிப்போம்.“ இவ்வாறு தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :