சிங்கள தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு





இக்பால் அலி-

சிவன் பவுண்டேஷன் வலது குறைந்த நிலையத்தமினால் தெல்தோட்டை பிரதேசத்திலுள்ள மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பள்ளேகம அல் உஸ்னா கல்லூரி மண்டபத்தில் இன்று 29-11-2014 நடைபெற்றது.

முனீர் சாதிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிவன் பவுண்டேஷன் வலது குறைந்த நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலந்து கொண்டார்.

300 கற்றல் உபகரணங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு முறையே சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
இதில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ, ஆர், எம். அம்ஜாட், தெல்தோட்டை பிரதேச செயலாளர். சமயப் பெரியார்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :