இரவுவிடுதியில் சுவீஸ் நாட்டைச் சேர்ந்த ஜோடியொன்று தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஹோட்டலில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றில் வைத்து தாக்கப்பட்டார்கள் என்று கூறப்படும் சுவீஸ் நாட்டைச் சேர்ந்த ஜோடியொன்று, மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

சினமன் கார்டன் ஹோட்டலில் உள்ள இரவுவிடுதிக்கு சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாம் தாக்கப்பட்டதாக, அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்முறைப்பாட்டை பதிவு செய்துகொண்ட பொலிஸார், படுகாயமடைந்திருந்த குறித்த ஜோடிகளை களுபோவில வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :