கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்?

அவதானி-
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி இரண்டு வருடங்களிற்கு பிறகு முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவது என்ற தீர்மானத்தின்படி ஏ.எம்.ஜெமீலுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த வகையில் அம்பாரைக்கு அந்தப் பதவியை வழங்குவதற்கு ரவுப் ஹக்கீம் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

அமைச்சர் ரவுப் ஹக்கீம் இல்லத்தில் இடம்பெறும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளுடனான சந்திப்பில் முதலமைச்சர் பதவியை ஜெமிலுக்கு வழங்குவதற்கு ஹக்கீம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

முதலமைச்சர் பதவியை ஏ.எம்.ஜெமீலுக்கு வழங்கும் பட்சத்தில் ஹாபிஸ் நஸீர் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியை வகிப்பார். மன்சூரின் அமைச்சுப் பதவி அரசாங்கதரப்பின் மாற்றுக் கட்சிக்கு வழங்கப்படவுள்ளதாகவும், சுகாதார அமைச்சர் மன்சூருக்கு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குவதாகவும் ஹக்கீம் தீர்மானம் செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :