மஹிந்த சிந்தனையில் 'செழிப்பான இல்லம்' என்ற தொனிப் பொருளில் திவிநெகும குடும்பங்களுக்கு 2500 ரூபா

பி.எம்.எம்.ஏ.காதர்-

ல்முனை பிரதேச செயலகப்பிரில் உள்ள 6084 திவிநெகும குடும்பங்களுக்கு தலா 2500 ரூபா நாளை (18-11-2014) வழங்கப்படவுள்ளது.   மஹிந்த சிந்தனையில் 'செழிப்பான இல்லம்'  என்ற தொனிப் பொருளில் வீடுகளில் உள்ள சிறிய குறைபாடுகளைத் திருத்தவதற்கு முதல் கட்டமாக இந்த நிதி வழங்கப்படுகின்றது. 

கல்முனை பிரதேச செயலக திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நற்பிட்டிமுனை,மருதமுனை,கல்முனைக்குடி ஆகிய கிராமங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் கல்முனை பிரதேச அபிவிருத்திக்  குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திவிநெகும பயனாளிகளுக்கு இந்த நிதியை வழங்கவுள்ளார்.

விசேட அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.மங்கள விக்கிரம ஆராச்சி, கௌரவ அதிதியாக அம்பாரை மாவட்ட திவிநெகும பிரதிப் பணிப்பாளர்  ஐ.அலியார், மற்றும் அதிதிகளாக திவிநெகும உத்தியோகத்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மருதமுனை,நற்பிட்டிமுனை திவிநெகும வங்கி ஊடாக 3068 குடும்பங்களும், கல்முனைக்குடி  திவிநெகும வங்கி ஊடாக 3016 குடும்பங்களுமாக 6084 குடும்பங்கள் இந்த நிதியைப் பெறவுள்ளனர். இதற்காக 151இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக  கல்முனை பிரதேச செயலக திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :