நிறை­வேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க ஜாதிக ஹெல உறு­ம­ய­வையும் இணைந்­து­கொள்­ளு­மாறு UNP அழைப்பு

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்து நாட்டில் நல்­லாட்­சி­யையும் ஜன­நா­ய­கத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் மேற்­கொள்­ளப்­படும் வேலைத்­திட்­டத்தில் ஜாதிக ஹெல உறு­ம­ய­வையும் இணைந்­து­கொள்­ளு­மாறு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திஸ்ஸ அத்­த­நா­யக்க அழைப்பு விடுத்­துள்ளார்.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழித்து 17 ஆவது திருத்தச் சட்­டத்தை மீண்டும் ஏற்­ப­டுத்த வேண்­டு­மென ஜாதிக ஹெல உறு­மய அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால், இதனை இந்த அர­சாங்கம் ஒரு­போதும் செய்யப் போவ­தில்லை. எனவே, இந்தத் திட்­டத்தை தொடர்ந்தும் வலி­யு­றுத்­தி­வரும் எம்­முடன் கை­கோர்ப்­பதே சிறந்­தது எனவும் அவர் தெரி­வித்தார்.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்கி 17 ஆவது திருத்தச் சட்­டத்தை ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மென ஜாதிக ஹெல உறு­ம­யவின் உப தலைவர் அத்­து­ர­லிய ரத்தன தேரர் அர­சாங்கத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். இது தொடர் பில் ஐ.தே.கட்­சியின்
் பொது செய­லாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திஸ்ஸ அத்­த­நா­யக்க கருத்து தெரி­வித்த போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தான எதிர்க்­கட்சி என்ற வகையில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்கி 17 ஆவது திருத்தச் சட்­டத்தை மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்தி நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டத்தை நாம் ஏற்­க­னவே ஆரம்­பித்­துள்ளோம். 

அது தொடர்பில் பல்­வேறு கட்­சி­க­ளு­டனும் அமைப்­புக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்றோம்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இது­வ­ரையில் அந்த வாக்­கு­று­திகள் எத­னையும் நிறை­வேற்­ற­வி்ல்லை. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்­கான நல்­ல­தொரு சந்­தர்ப்பம் அவ­ருக்கு உள்­ளது. ஆனால், அதனை அவர் ஒரு­போதும் செய்­ய­மாட்டார் என்­பது தெட்டத் தெளி­வா­கி­யுள்­ளது.

அர­சாங்­கத்­தி­லுள்ள சில இட­து­சா­ரிகள் இதனை வலி­யு­றுத்தி வந்த நிலையில் தற்­போது ஜாதிக ஹெல உறு­ம­யவும் அந்தப் பட்­டி­யலில் இணைந்­துள்­ளது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்க வேண்­டு­மென்ற உண்­மை­யான நோக்­கமும் தேவையும் ஹெல உறு­ம­ய­வுக்கு இருக்­கு­மானால் அவர்கள் எம்­மோடு இணை­யலாம்.

நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்கு சவாலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் இந்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்கி, சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை ஏற்­ப­டுத்தி, நல்­லாட்­சியை உறு­திப்­ப­டுத்­து­வதே எமது நோக்கம். அதற்­கான வேலைத்­திட்­டங்­களை தொடர்ந்தும் முன்­னெ­டுப்போம் எனவும் அவர் குறி்ப்­பிட்டார்.

இதே­வேளை, ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் இட­து­சாரி கட்­சிகள் கடு­மை­யான நிலைப்­பாட்டை பின்­பற்­று­கின்­றன ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் இட­து­சாரி கட்­சிகள் கடு­மை­யான நிலைப்­பாட்டை பின்­பற்றி வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் செய்­யாது தேர்தல் நடாத்­தப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என இட­து­சாரி கட்­சி­களின் தலை­வர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். நாடா­ளு­மன்­றிற்கு அதி­கா­ரத்தை வழங்­கக்­கூ­டிய வகையில் அர­சியல் அமைப்பு திருத்­தப்­பட வேண்டும். அர­சியல் அமைப்பில் திருத்­தங்கள் செய்­யாமல் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­பட்டால் அது ஆளும் கட்­சிக்கு பாரி­ய­ளவில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

17ம் திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தல், ஜனா­தி­பதி முறை­மையை ரத்து செய்தல் உள்­ளிட்ட பல்­வேறு முக்­கிய கார­ணி­களின் அடிப்­ப­டையில் எதிர்க்­கட்­சிகள் பிரச்­சா­ரத்தில் ஈடு­ப­ட­வுள்­ளன.

எனவே அர­சியல் அமைப்பில் திருத்தம் செய்­யாது ஜனா­தி­பதி தேர்­தலை நடாத்­து­வது பாத­க­மான நிலை­மையை ஏற்­ப­டுத்தக் கூடும் என இட­து­சாரி கட்­சிகள் தெரி­வித்­துள்­ளன. கம்­யூனிஸ்ட் கட்சி, லங்கா சம­ச­மாஜ கட்சி, ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி உள்­ளிட்ட கட்­சிகள் இந்தக் கோரிக்­கையை விடுத்­துள்­ளன.
இதே­வேளை, நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்தல், பொதுத் தேர்தல் ஆகி­ய­வற்றை இலக்கு வைத்து அர­சாங்­கத்தை வீழ்த்தும் வகையில் பல்­வேறு கட்­சி­க­ளு­டனும், பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்­றினை மேற்­கொள்­வ­தற்கு பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி திட்­ட­மிட்டு வரு­வ­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும் ஜன­நா­யக கட்­சியின் தலை­வ­ரு­மான சரத் பொன்­சேகா போன்­றோ­ரையும் இணைத்துக் கொண்டு இந்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை மேற்­கொள்ள ஐ.தே.க. முயல்­வ­தா­கவும் தெரிய வரு­கி­றது.

இது தொடர்பில், அர­சாங்­கத்­துக்கு வெளியில் இருக்கும் சில கட்சிகளுடன் உத்தியோகபூர்வமற்ற வகையிலான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளது. அதேவேளை, வட, கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காஙகிரஸ், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மேலும் சில பெரும்பான்மை கட்சிகளுடனும் இந்த உடன்படிக்கை தொடர்பில் விரைவில் கலந்துரையாடவுள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :