கிண்ணியாவில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு கஷ்டப் பிரதேசக் கொடுப்பனவில் பாகுபாடு- மஹ்ரூப் MPC

கிழக்கு மாகாண சபை அமர்வில் இம்ரான் மஹ்ரூப் கேள்வி
கிண்ணியா கல்வி வலயத்தில் முஸ்லிம் ஆசிரியர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர் என்பதற்காகவா அவர்களுக்கான கஷ;டப் பிரதேச கொடுப்பனவில் பாகுபாடு காட்டப் பட்டுள்ளது? 

 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இவ்வாறு கேள்வி எழுப்பினர். 

கிண்ணியா கல்வி வலய ஆசிரியர்களுக்கு 2007 ஜனவரி முதல் 2007 டிசம்பர் வரையான காலப் பகுதிக்கு கொடுக்க வேண்டிய கஷ;டப் பிரதேச கொடுப்பனவு நிலுவை இதுவரை வழங்கப்படவில்லை. இது குறித்து தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:

இக்காலப் பகுதிக்கான கஷ;டப் பிரதேசக் கொடுப்பனவு நிலுவை அயலிலுள்ள கந்தளாய், மூதூர், திருகோணமலை கல்வி வலய ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கிண்ணியா கல்வி வலய ஆசிரியர்களுக்கு மட்டும் இது வழங்கப்படவில்லை. ஒரே மாவட்டத்தில் ஏன் இந்தப் பாகுபாடு?

இது குறித்து அங்குள்ள ஆசிரியர் சங்கங்கள், அதிபர் சங்கம் என்பன கல்வி பகுதியின் சகல மட்டங்களுக்கும் பலமுறை வேண்டுகோள்கள் முன் வைத்துள்ளன. எனினும் 7 வருடங்கள் கழிந்தும் எந்த ஒரு மட்டத்திலிருந்தும் இதுவரை திருப்தியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

கிண்ணியா என்னுடைய சொந்த ஊர் மட்டுமல்ல. எங்களது முதலமைச்சருடைய ஊரும் தான். அவர் இக்காலப் பகுதியில் கூட்டுறவு அமைச்சராக இருந்துள்ளார். அதன் பின் ஜனாதிபதியின் ஆலோசகராக இரண்டு வருடங்கள் இருந்துள்ளார். இப்போது இரு வருட காலமாக முதலமைச்சராக இருக்கிறார்.

எனினும், இந்தக் கொடுப்பனவு விடயத்தில் திருப்தியான பதில் கிடைக்காததால் அதிகமான அதிபர்களும், ஆசிரியர்களும் என்னைத் தொடர்ச்சியாக சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். எனவே, கல்வி அமைச்சர் இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி கொடுப்பனவு நிலுவையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் விமலவீர திசாயநாயக்க, 'இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே ஒரு மாத காலத்துக்குள் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :