வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தின் இறுதி நிகழ்வு






த.நவோஜ்-

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை விசேட பூசைகள் இடம்பெற்றது.

கடந்த 03ம் திகதி ஆரம்பமான கேதார கௌரி விரதம் 21 நாட்களாக அடியார்கள் விரதம் அனுஸ்டித்து வியாழக்கிழமை தோரணை அணிவித்து தமது விரதத்தினை நிறைவு செய்தனர்.

பத்திரகாளி அம்பாள் ஆலய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ்விரத பூசையின் போது ஆயிரக் கணக்கான பக்த அடியார்கள் அபிஷேகப் பூசை, வசந்த மண்டப பூசை மற்றும் தோரணை அணிவிக்கும் பூசைகளில் கலந்து கொண்டு தங்களுடைய விரத்தினை நிறைவு செய்து கொண்டனர்.

இதன்போது பத்திரகாளி அம்பாள் ஆலய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனால் கேதார கௌரி விரதத்தின் மகிமை பற்றிய நற்சிந்தனை இடம்பெற்றது.

கேதார கௌரி விரத பூசைகள் யாவும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.எஸ்.முறசொலிமாறன் குருக்களினால் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :