த.நவோஜ்-
வாகரை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் கண்டலடி சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை விசேட பூசைகள் இடம்பெற்றது.
கடந்த 03ம் திகதி ஆரம்பமான கேதார கௌரி விரதம் 21 நாட்களாக அடியார்கள் விரதம் அனுஸ்டித்து வியாழக்கிழமை தோரணை அணிவித்து தமது விரதத்தினை நிறைவு செய்தனர்.
ஆலய பிரதம குருவும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனினால் அபிஷேகப் பூசை, சிவலிங்கத்திற்கான பூசைகள் இடம்பெற்றது.
பின்னர் விரத அடியார்களுக்கு தோரணை வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது நூற்றுக் கணக்கானோர் விரத்தினை அனுஸ்டித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment