கவனிப்பாரற்ற நிலையில் நிந்தவூர் மையவாடி

நிந்தவூரில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மையவாடிகளில் ஒன்றான நிந்தவூர் 6ம், பிரிவுக்குட்பட்ட பிரதேசம்,“அல்-“பத்துறியா’’பாடசாலைக்கு முன்பாக அமைந்திருக்கும் மையவாடியின் நிலை மிகவும் மோசமான நிலையில் கிடப்பதை அப்பிரதேச மக்கள் மனம் நொந்து தெரிவித்துள்ளனர்,

இது தொடர்பாக அப் பிரதேச மக்கள் கூறுகையில்: தாம் பல முறை இது சம்மந்தமாக பிரதேச சபை, அரசியல்வாதிகள் சகிதம் பல தொண்டு நிறுவனங்களிடமும் முறையிட்டுள்ளோம். ஆனால் இதுவரை காலமும் எந்தவொரு அமைப்பும் இதனை புணரமைப்பதற்கு முன்வரவில்லை எனும் போது சற்று சங்கடமாகவே உள்ளதென்று அப் பிரதேசமாக்க கூறுகின்றனர்.

இதை நேரில் சென்று அவதானித்த சிலர் கூறுகையில் அவ் மையாவாடியை சுற்றிவர இரு பக்கங்கள்மாத்திரம்மே குறிகிய உயர மதில்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதும் மீதி உள்ள பக்கங்கள் மதில்கள் அற்ற நிலையில் நாய்கள் உட்சென்று கபூர்கள்’ தோன்றப்பட்ட நிலையில் கிடப்பதை அவதானிக்க முடிந்ததாககூறுகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு மக்களாகிய நாம் இவ் மையவாடியை புணரமைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சுற்றிவரையிலான மதில்களை ஒழுங்கான முறையில் அமைப்பதற்கு நம்மால் முடிந்தவரை நமதுபங்களிப்பினையும் ஒத்துழைப்பினையும் வழங்க முன்வரவேண்டும்,

மேலும் இது சம்மந்தமாக பிரதேச சபை மற்றும் அரசியல் சார்புகள். இதனை மீண்டும் ஒருமுறை உங்கள் கவனத்திலும் எடுத்துகொண்டு உங்களால் முடிந்தவரை இவ் மையவாடியை புணரமைப்பதற்கு உங்கள்பங்களிப்பினை தந்தருளுமாறு மக்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்.

முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :