அமெரிக்காவின் கிழக்கு மிசோரியில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற துறைமுகம் நகரம் செயின்ட் ஜாயிஸ் லூயிஸ் நகரம் உள்ளது. இங்கு கறுப்பர் இனத்தை சேர்ந்த 18 வயது வாலிபரை நேற்று முன்தினம் வெள்ளைக்கார போலீஸ்காரர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் அதே இடத்தில் பலியானார். இந்த தகவல் செயின்ட் லூயிஸ் நகரில் வாழும் கறுப்பர் இனத்தவர் மத்தியில் பரவியது.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு தான் பெர்குசன் நகரில் கறுப்பர் இனத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் கலவரமும் மோதலும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இரவில் வீதிகளிலும், திரண்டனர். ரோடுகளில் மறியல் போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணிக்கு வந்த 2 போலீஸ் வாகனங்களை சிறை பிடித்து அடித்து உடைத்தனர். அதில் அவை பலத்த சேதம் அடைந்தன.
அதைத் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெர்குசன் நகரில் இருந்து வந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட வாலிபர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அவரை விரட்டி பிடிக்க முயன்ற போது போலீசாரை நோக்கி சுட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். பதிலுக்கு சுட்டதில் அந்த வாலிபர் இறந்ததாகவும் பேலீசார் கூறியுள்ளனர்.
ஆனால் வாலிபர் துப்பாக்கி வைத்திருக்க வில்லை. கையில் அவர் சாண்ட்விச் வைத்திருந்தார். அது பார்ப்பதற்கு துப்பாக்கி போன்று தெரிந்தது. தவறாக புரிந்து கொண்ட போலீசார் அவரை சுட்டு கொன்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
# உண்மை : எவ்வளவவு பெரிய பதவியில் ஒரு கருப்பன் இருந்தாலும் சரி , கருப்பன் கருப்பன் தான் தாழ்ந்த்வன், எவ்வளவு பெரிய கேவலமணா பதவியில் ஒரு வெள்ளையன் இருந்தாலும் சரி அவன் தான் உயர்ந்தவன் - இது தாண்டா அமெரிக்காவின் கலாசாராம் - ஒரு சில விதிவிலக்குகளை தவீர ....!!!!
0 comments :
Post a Comment