பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனைப்பகுதியில் சற்று முன்னர் 10.மணியளவில் திருடன் ஒருவன் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளான். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஊருக்குள் களவுகள் நடைபெறுவதாக மக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று இரவு 10 மணியளவில் திருடன் ஒருவன் அட்டாளைச்சேனை கோணாவத்தைப்பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுளைந்த நிலையில் விரட்டிப்பிடித்துள்ளனர்.
இரண்டு கத்திகளை தன்னுள் மறைத்து வைத்திருந்த திருடன் பல நாட்களாக வீடுகளில் திருடிவருதாகவும் விசாரணையின் போது தெரிவித்தான்
பிடிக்கப்பட்ட திருடனை பாலமுனை இராணுவ முகாம் இரானுவத்தினரிடம் ஒப்படைத்து பின்னர் இரானுவத்தினரால் அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment